டென்னிஸ் ஏ.டி.பி., பைனல்ஸ் சில், இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்று ,மீண்டும் சாம்பியன் . இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு.
ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர்இத்தாலியின் டுரின் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-2'. இத்தாலியின் ஜானிக் சின்னர், ‘நம்பர்-1' வீரர், ஸ்பெயினின் அல்காரஸ்,. இந்த ஆண்டில் இருவரும் ஆறாவது முறையாக நேருக்கு நேர் மோதினர்.
முதல் செட்டை சின்னர் 7-6 என வசப்படுத்தினார். இரண்டாவது 5-5 செட் என இழுபறியாக இருந்தது. பின் சின்னர் 7-5 என கைப்பற்றி ,வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பை தக்க வைத்துக் கொண்டார்.. இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு கிடைத்தது. அல்காரஸ் ரூ 24 கோடி பெற்றார்.
0
Leave a Reply